search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவியிடம் சில்மி‌ஷம்"

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவியிடம் ‘சில்மி‌ஷம்’ செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தொம்மையார்புரம் கிராமத்தை சேர்ந்த மீனவர் அருள்தாசன் (வயது41). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

    அது போல சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார் அப்போது அவரது நண்பர் வீட்டில் இல்லை. நண்பரின் மனைவியும் வெளியே கடைக்கு சென்று இருந்தார். அவர்களது மகளான 6-ம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

    அருள்தாசன், அந்த மாணவி அருகே அமர்ந்து டி.வி. பார்ப்பது போல் மாணவியின் தோளில் கைபோட்டு ‘சில்மி‌ஷம்’ செய்துள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த அந்த மாணவியின் தாய் வந்து விட்டார். அவரை பார்த்ததும் அருள்தாசன் வெளியே தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருள்தாசனை சத்தம் போட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருள்தாசனை கைது செய்தனர்.

    ×